உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- விருதுநகரில் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் வரவேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்துமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் வரவேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.