உள்ளூர் செய்திகள்

ஆங்கில பேச்சு பயிற்சி

Published On 2023-08-15 08:12 GMT   |   Update On 2023-08-15 08:12 GMT
  • காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில பேச்சு பயிற்சி நடந்தது.
  • நிறைவு விழாவில் ரோட்டரி மாவட்ட தலைவர் குருசாமி சிறப்புரையாற்றினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியல் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு 3 நாள் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் நடந்தது. திட்ட தலைவர் சியாம்ராஜா தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது குறித்து பயிற்சி அளித்தார்.

ரோட்டரி தலைவர்கள் ராம்குமார்(சிவகாசி), சண்முகம்(விருதுநகர்) முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் வளர்மதி சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். சண்முகநடராஜன் வாழ்த்துரை வழங்கினார். 3 நாட்கள் நடந்த இந்த பேச்சு பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. நிறைவு விழாவில் ரோட்டரி மாவட்ட தலைவர் குருசாமி சிறப்புரையாற்றினார்.

Tags:    

Similar News