டிரைவர்- வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
- டிரைவர்- வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள உளுத்திமடையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது36),டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரியா மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபாகரன் மது, போதை பழக்கத்திற்கு அடிமை யானார். இதனால் பிரியா, குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த பிரபாகரன் மன உளைச்ச லில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண் டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படிக்காசு வைத்தான் பட்டி குலாளர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(47). இவருக்கும். இவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவி, மூத்த மகனுடன் கோவில்பட்டி யில் வசித்து வருகிறார். இதனால் மன விரக்தியில் இருந்த சிவகுமார் மாடி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து(33). இவரது மனைவி லட்சுமிபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்து மது பழக்கத்திற்கு அடிமை யானதால் மனைவி கோபித்துக்கொண்டு கேரளா சென்றுவிட்டார். இதையடுத்து குழந்தைகளை பராமரிக்க மாரிமுத்து சிரமப்பட்டு வந்தார்.
இதனால் மன வேதனையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.