உள்ளூர் செய்திகள்

கல்வி உதவி தொகை வழங்கல்

Published On 2023-08-19 08:49 GMT   |   Update On 2023-08-19 08:49 GMT
  • கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
  • ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்றது.

ராஜபாளையம்

ராம்கோ குரூப் நூற்பாலைகளில் பணி புரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்படு கிறது. அதன்படி இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 1,885 தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது. ராம்கோ நூற்பாலை பிரிவின் தலைவர் மோகனரெங்கன், துணைத் தலைவர்-மனிதவளம் நாகராஜன், முதுநிலை பொது மேலாளர்- பணிகள் பாலாஜி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்கங்களின் சார்பில் எச்.எம்.எஸ். பொது செயலாளர் கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News