உள்ளூர் செய்திகள்

காங்கிரசார் பாதயாத்திரை

Published On 2022-08-14 09:16 GMT   |   Update On 2022-08-14 09:16 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர்.
  • மாநிலச் செயலாளர் வசந்தம் சேதுராமன், மாவட்ட செயலாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

75 - வந்து இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாத யாத்திரை நடந்தது.

இந்திரா நகர் தொடங்கி மதுரை சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, சின்னக்கடை பஜார், ஆத்துக்கடைத் தெரு, மேற்கு ரதவீதியில் உள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு மற்றும் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வடக்கு ரதவீதி வழியாக சென்று நகராட்சி உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜ்மோகன், நகரத் தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை தலைவர் பெரியசாமி, வட்டார தலைவர்கள் பாலகுருநாதன், முருகராஜ், மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயக்குமார், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் காளீஸ்வரி, ஆர்.டி.ஐ. மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச் செல்வன், ஆர்.டி.ஐ.மாநிலச் செயலாளர் வசந்தம் சேதுராமன், மாவட்ட செயலாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். துள்ளுக்குட்டி நன்றி கூறினார்.

Tags:    

Similar News