உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது புகார்

Published On 2022-06-18 08:42 GMT   |   Update On 2022-06-18 08:42 GMT
  • இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது புகார் வந்துள்ளது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.

 விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பகுதியை சேர்ந்த இளம்பெண் பிளஸ்-1 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரும், முத்து லட்சுமி என்ற பெண்ணும் தோழிகளாக பழகி வந்தனர்.

இதனால் இளம்பெண் அடிக்கடி தோழி முத்துலட்சுமி வீட்டுக்குச் சென்று வருவார். அப்போது முத்துலட்சுமியின் அண்ணன் தலைமலை என்பவரும், இளம் பெண்ணும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நட்பு காதலாக மாறியது.

கடந்த ஏப்ரல் 15-ந் தேதி இளம் பெண் வீட்டுக்குச் சென்றபோது தலைமலை அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். இதில் இளம் பெண் கர்ப்பமானார்.

இதுபற்றி பெற்றோருக்கு தெரியவந்ததால் இளம்பெண் கடந்த 16-ந் தேதி குருணை மருந்தை(விஷம்) குடித்து விட்டார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமலை மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தலைமலையை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News