உள்ளூர் செய்திகள்

சஞ்சீவிமலை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நிறுவனங்கள் பங்களிப்பை அளிக்கலாம்-புலிகள் காப்பக துணை இயக்குநர் தகவல்

Published On 2023-11-17 13:32 IST   |   Update On 2023-11-17 13:32:00 IST
  • ராஜபாளையத்தில் சஞ்சீவிமலை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நிறுவனங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
  • இந்த தகவலை மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், கொத்தன்குளம் காப்பு காட்டிற்கு கீழ்புறம் உள்ள நிலம் 17.67.5 ஹெக்டேர் பரப்பில் பூமிதான அமைப்பிற்கு சொந்தமான இடம் ஆகும். இதனை வருவாய் துறை மற்றும் பூமிதான அமைப்பு வனத்துறைக்கு இந்த நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒப்படைத்து உள்ளது.

மாவட்ட பசுமைக்குழு கூட்ட நடவடிக்கையின்படி வனத்துறையினர் மேற் கண்ட நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா வாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள் ளது.

ராஜபாளையம் நகரின் கிழக்கு பகுதியில் 200 ஹெக் டேர் பரப்பில் கொத்தன்கு ளம் பாதுகாப்பு காடு அமைந்து உள்ளது. இந்த காப்புக் காட்டில் மரங்கள் நட்டு வளர்ப்பதற்கும் வளமிக்க காடாக மாற்றுவதற்கும் அதன் அருகில் அமைந்துள்ள பூமிதான அமைப்புக்கு சொந்தமான இடத்தில் சஞ்சீவி மலை சுற்றுச்சூழல் பூங்காவாக அமைப்பதற்கும், ஆர்வமுள்ள இயற்கை ஆர்வலர்கள், தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை மதுரை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் புலிகள் அறக்கட்டளை (Tiger foundation) அமைப்பின் கணக்கு எண். 74390100010561, IFSC code. BARBOVJMADU, MICR 625012013 மூலமாக செலுத் தலாம்.

மேலும் இது பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ராஜபாளையம் வனச்சரக அலுவலர் செல்போன்எண்: 99423 28515-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீவில் லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News