என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சூழல் பூங்கா"

    • இயற்கை அழகை ரசித்தபடி பூங்காவை சுற்றி நடைபயிற்சி செல்ல வசதியாக 25 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
    • நிலத்தை தயார் செய்தல் மற்றும் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது சிறுமலை. இங்கு பழையூர், புதூர், தென்மலை, பசலிக்காடு, தாளக்கடை, குரங்கு பள்ளம் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. மா, பலா, வாழை , நெல்லி, எலுமிச்சை, சவ்சவ், மிளகு, காப்பி போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

    காட்டு மாடு, மர அணில், காட்டு பன்றிகள், சென்நாய் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இங்கு வெள்ளிமலை சிவ ன்கோவில், தோட்டக்கலை த்துறையின் பண்ணை ஆகியவை உள்ளது.

    வார விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மத்திய அரசு சார்பில் சிறுமலை அடிவாரத்தில் வனப்பகுதியை யொட்டி 25 ஏக்கரில் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இயற்கை அழகை ரசித்தபடி பூங்காவை சுற்றி நடைபயிற்சி செல்ல வசதியாக 25 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலத்தை தயார் செய்தல் மற்றும் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் வனத்துறை சார்பில் தென்மலையில் ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராஜபாளையத்தில் சஞ்சீவிமலை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நிறுவனங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
    • இந்த தகவலை மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், கொத்தன்குளம் காப்பு காட்டிற்கு கீழ்புறம் உள்ள நிலம் 17.67.5 ஹெக்டேர் பரப்பில் பூமிதான அமைப்பிற்கு சொந்தமான இடம் ஆகும். இதனை வருவாய் துறை மற்றும் பூமிதான அமைப்பு வனத்துறைக்கு இந்த நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒப்படைத்து உள்ளது.

    மாவட்ட பசுமைக்குழு கூட்ட நடவடிக்கையின்படி வனத்துறையினர் மேற் கண்ட நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா வாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள் ளது.

    ராஜபாளையம் நகரின் கிழக்கு பகுதியில் 200 ஹெக் டேர் பரப்பில் கொத்தன்கு ளம் பாதுகாப்பு காடு அமைந்து உள்ளது. இந்த காப்புக் காட்டில் மரங்கள் நட்டு வளர்ப்பதற்கும் வளமிக்க காடாக மாற்றுவதற்கும் அதன் அருகில் அமைந்துள்ள பூமிதான அமைப்புக்கு சொந்தமான இடத்தில் சஞ்சீவி மலை சுற்றுச்சூழல் பூங்காவாக அமைப்பதற்கும், ஆர்வமுள்ள இயற்கை ஆர்வலர்கள், தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை மதுரை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் புலிகள் அறக்கட்டளை (Tiger foundation) அமைப்பின் கணக்கு எண். 74390100010561, IFSC code. BARBOVJMADU, MICR 625012013 மூலமாக செலுத் தலாம்.

    மேலும் இது பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ராஜபாளையம் வனச்சரக அலுவலர் செல்போன்எண்: 99423 28515-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீவில் லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    • ராஜபாளையத்தில் சஞ்சீவிமலை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நிறுவனங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
    • இந்த தகவலை மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், கொத்தன்குளம் காப்பு காட்டிற்கு கீழ்புறம் உள்ள நிலம் 17.67.5 ஹெக்டேர் பரப்பில் பூமிதான அமைப்பிற்கு சொந்தமான இடம் ஆகும். இதனை வருவாய் துறை மற்றும் பூமிதான அமைப்பு வனத்துறைக்கு இந்த நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒப்படைத்து உள்ளது.

    மாவட்ட பசுமைக்குழு கூட்ட நடவடிக்கையின்படி வனத்துறையினர் மேற் கண்ட நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா வாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.

    ராஜபாளையம் நகரின் கிழக்கு பகுதியில் 200 ஹெக் டேர் பரப்பில் கொத்தன்கு ளம் பாதுகாப்பு காடு அமைந்து உள்ளது. இந்த காப்புக் காட்டில் மரங்கள் நட்டு வளர்ப்பதற்கும் வளமிக்க காடாக மாற்றுவதற்கும் அதன் அருகில் அமைந்துள்ள பூமிதான அமைப்புக்கு சொந்தமான இடத்தில் சஞ்சீவி மலை சுற்றுச்சூழல் பூங்காவாக அமைப்பதற்கும், ஆர்வமுள்ள இயற்கை ஆர்வலர்கள், தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை மதுரை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் புலிகள் அறக்கட்டளை (Tiger foundation) அமைப்பின் கணக்கு எண். 74390100010561, IFSC code. BARBOVJMADU, MICR 625012013 மூலமாக செலுத் தலாம்.

    மேலும் இது பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ராஜபாளையம் வனச்சரக அலுவலர் செல்போன்எண்: 99423 28515-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீவில் லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ×