- விருதுநகரில் கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.
- அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் நாராய ணமடம் தெருவைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் ஜெயரூபிணி (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஜெயரூபிணியின் குடும்பத்திற்கு தெரியவர அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ஜெயரூபிணி அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இது குறித்து அவரது தாயார் செல்வி பஜார் போலீசில் புகார் செய்தார். அதில், காதலனுடன் சென்றி ருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.