உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் கலெக்டர் ஜெயசீலன் பேசியபோது எடுத்த படம்.

காலநிலை பாதிப்புகள் அடுத்துவரும் சந்ததிகளுக்கு பிரச்சினையை உண்டாக்கும்

Published On 2023-11-22 05:43 GMT   |   Update On 2023-11-22 05:43 GMT
  • காலநிலை பாதிப்புகள் அடுத்துவரும் சந்ததிகளுக்கு பிரச்சினையை உண்டாக்கும்.
  • விருதுநகர் சுற்றுச்சுழல் கருத்தரங்கில் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சுற்றுச் சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், காலநிலை மாற்றம் இயக்கம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கம் உதவி இயக்குநர் மணிஷ்மீனா, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி னார். கருத்தரங்கில் கலெக் டர் மற்றும் அதிகாரிகள் பேசினர்.

அதில் இந்தியரின் சரா சரி ஆயுட்காலம் 73 ஆண்டு கள். இந்தியாவின் டெல்லி போன்ற நகரங்களில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்கா லம் காற்று மாசால் 6 ஆண்டு கள் குறைகிறது என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. 2050 ஆம் ஆண்டில் 4-ல் 3 பங்கு மக்கள் நகரங்கள் மற்றும் நகரங்கள் ஒட்டி பகுதிகளில் தான் வசிப்பார் கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக் கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சி னைகள் அதிகமாகும். மேலும், வெப்பநிலை படிப் படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் நகரமயவாவதில் முன்னி லையில் இருப்பது தமிழ்நாடு தான்.காலநிலை மாற்றத் தால் கடல் மட்டத்தில் இருந்து வெப்பம் அதிகமாக வருவதால் பலத்த காற்றுடன் வெப்ப சலனம் மழை அதிக மாக உள்ளது. சில இடங் களில் பருவமழை பொய்த்து தண்ணீருக்காக அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை யும் உள்ளது.இந்த பிரச்சினைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், நம் அடுத்த சந்ததிகளுக்கு இது மிகவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்க வழி வகுத்திடும்.

இந்தியா போன்ற அதிக மான மக்கள் தொகை வாழக்கூடிய நாடுகளில் இது குறித்து அதிகமாக பேசு வதற்கும், சிந்திப்பதற்கும் மிக முக்கியமான தேவை இருக்கிறது. இதை அனை வருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற கருத்தரங் குகள் நடைபெறுகிறது.

இவ்வாறு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராம்ராஜ், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

Tags:    

Similar News