உள்ளூர் செய்திகள்

ஆண்டாள் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

Published On 2022-12-08 07:58 GMT   |   Update On 2022-12-08 07:58 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
  • 108 வைணவத் திருத்தலங்களில் இந்த கோவில் முக்கியமான திருத்தலமாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முக்கியமான திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் முன்புறமும், பெரிய பெருமாள் சன்னதி பெரிய கோபுரம் வாசல் முன்பும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று 2 இடங்களிலும் சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஆண்டாள் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளினர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News