உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.

பி.எஸ்.ஆர். கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

Published On 2022-10-10 06:51 GMT   |   Update On 2022-10-10 06:51 GMT
  • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
  • 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகணை வெளிப்படுத்தினர்.

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவ பொறியியல் துறையின் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரி தாளாளர்் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

உயிர் மருத்துவ பொறியியல் துறையின் 4-ம் ஆண்டு மாணவி வாஷினி வரவேற்றார். உயிர் மருத்தவ துறையின் துறைத்தலைவர் மணிகண்டன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை ''நிப்ரோ மெடிக்கல் இந்தியா'' நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் நம்பி வேதாச்சலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

3-ம் ஆண்டு மாணவர் சதீஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தின்ர் பேசுகையில், உயிர் மருத்துவ பொறியியல் துறை என்பது வளர்ந்து கொண்டிருக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையாகும்.

உயிர் மருத்துவ பொறியாளர்கள் மருத்தவ சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், மற்றும் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் பேப்பர் பிரசன்டேசன், மல்டிமீடியா பிரசன்டேசன், போஸ்டா் மேக்கிங் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில்நுட்பம் சாராத போட்டிகளும் நடந்தன.

இதில் பல்வேறு கல்லூரிகளில் இருத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகணை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், துறையின் பேராசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கிருத்திகா, காளீஸ்வரி, மாணவர் ஒருங்கிணைப்பாளர், 4-ம் ஆண்டு மாணவர் நெல்லையப்பராஜா மற்றும் துறை பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News