உள்ளூர் செய்திகள்

புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

Published On 2023-03-25 09:02 GMT   |   Update On 2023-03-25 09:02 GMT
  • ராஜபாளையம் பஸ் நிலையத்தில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
  • இதில் நகரசபை தலைவர் பங்கேற்றார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் டவுன் பஸ் நிலையமான பழைய பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிக்காக இடிக்கப்பட்டு மறு நிர்மாணம் செய்யப்படுகிறது. தற்பொழுது முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் பூமிபூஜையை நடத்தி வைத்தார்.

ஆணையாளர் பார்த்தசாரதி, துணைதலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்கள், பொறியாளர், இளநிலை பொறியாளர், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக கட்டுமானத்தை முடிக்க வேண்டும் என்று நகரசபை தலைவர் வலியுறுத்தினார். 

Tags:    

Similar News