உள்ளூர் செய்திகள்

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2023-07-29 07:54 GMT   |   Update On 2023-07-29 07:54 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் ஆணையின்படி கடந்த 18 முதல் 20-ந் தேதி வரை ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்களின் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதி உதவி ஆய்வர்கள் மேற்கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தெரிவித்தார்.

Tags:    

Similar News