பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி
- பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி கிடந்தார்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் அருகே உள்ள தரகன் தோட்ட தெருவை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்(வயது 23), கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி.இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது.
கடந்த 6-ந் தேதி நந்தினி கடைக்கு சென்றார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர் நந்தினியிடம் கேட்ட போது, அவர் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கார்த்தீஸ்வரனின் தந்தையிடம் நந்தினி கூறியுள்ளார். உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கார்த்தீஸ்வரன் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவர் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார்த்தீஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.