உள்ளூர் செய்திகள்

மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2023-09-28 06:56 GMT   |   Update On 2023-09-28 06:56 GMT
  • மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ஏமாற்றி வாலிபர், இளம்பெண்ணை கர்ப்பமாக்கினார்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபிரபுவை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.தொட்டியங்குளம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவருக்கு குறிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த வீரபிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகி விட்டதாகவும், இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவ தாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனால் இருவரும் நெருங்கிப் பழக தொடங்கி னர். இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது வீரபிரபு பலமுறை அங்கு சென்று நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் 4 மாத கர்ப்பிணியானார்.

இதை யடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வீரபிரபுவை வற்புறுத்தி னார். ஆனால் அவர் பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண் வீரபிரபு குறித்து விசாரித்துள்ளார். அதில், வீரபிரபு தனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும், மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபிரபுவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News