உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கணவர் மீது வழக்கு

Published On 2022-10-08 08:05 GMT   |   Update On 2022-10-08 08:05 GMT
  • இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இளம்பெண்ணின் தாய் கணேசமணியின் தந்தையிடம் ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்

விருதுநகர்

சிவகாசி கவிதா நகரைச் சேர்ந்தவர் கணேசமணி, சமையல் தொழிலாளி. இவரும் கோவில்பட்டியைச் சேர்ந்த 16 வயது பெண்ணும் ஆன்லைன் கேம் மூலம் பழகி வந்துள்ளனர். அவர்களது பெற்றோர் 4 ஆண்டுகளுக்கு பின்பு திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணின் தாய் கணேசமணியின் தந்தையிடம் ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதனை அவர் சொன்னபடி திருப்பி கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கணேசமணி கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி 16 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் சிவகாசி பர்மா காலனி, கவிதா நகர் ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளனர். இதன் பின்னர் கணேசமணியின் தந்தை 16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியு ள்ளார். அவருடன் இருப்பவர்களை போட்டோ எடுத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண்ணுடன் இருந்த ராணுவ வீரரையும் போட்டோ எடுத்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிவகாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசமணி, சுடலை மற்றும் கணேசமணியின் தந்தை, இளம்பெண்ணின் தாய், ராணுவவீரர் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News