உள்ளூர் செய்திகள்

ரூ.70 லட்சம் மோசடி புகார்

Published On 2023-10-16 07:23 GMT   |   Update On 2023-10-16 07:23 GMT
  • பெண்கள் பெற்ற கடனை இவர் வாங்கி கொண்டு தவணையை தான் செலுத்துவதாக கூறியதாக தெரிகிறது.
  • பாண்டிசெல்வி பல பெண்களிடம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

விருதுநகர்

விருதுநகர் கம்மா பட்டியை சேர்ந்த வர் பாண்டிசெல்வி(வயது35). இவர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அதே பகுதியை சேர்ந்த பல பெண்கள் பெற்ற கடனை இவர் வாங்கி கொண்டு தவணையை தான் செலுத்துவதாக கூறியதாக தெரிகிறது.

ஆனால் அந்த தொகையை சரியாக செலுத்தாததால் அந்த பெண்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் விருதுநகர் கிழக்கு போலீசிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து நேற்று பாண்டி செல்வியை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இதையறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பாதிக்கப் பட்ட பார்வதி என்ற பெண் தான் அணிந்திருந்த வளை யலால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படு கிறது. உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். பாண்டிசெல்வி பல பெண்களிடம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News