உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

Published On 2022-08-28 08:40 GMT   |   Update On 2022-08-28 08:40 GMT
  • மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிக்கப்பட்டது.
  • நகையை பறித்தது கே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகேஸ்வரி (31) என தெரியவந்தது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அத்திப்பட்டி மெயின்ரோடு ஜெயராம் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 76). சம்பவத்தன்று இவரிடம் ஒரு பெண் வாடகைக்கு வீடு தொடர்பாக விசாரித்தார். அப்போது திடீரென அந்த பெண் தனலட்சுமி மீது மயக்க ஸ்பிரே அடித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் நகையை பறித்தது கே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகேஸ்வரி (31) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News