உள்ளூர் செய்திகள்

விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிப்பு முயற்சி-2 வாலிபர்கள் கைது

Published On 2023-10-11 14:12 IST   |   Update On 2023-10-11 14:12:00 IST
  • விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிப்பு முயற்சி-2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியப்பட்டி அருகே யுள்ள சிலுக்கப்பட்டி பகுதி யில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த அரசு பெண்கள் மேல்நி–லைப்பள்ளி விடுதி காப்பா ளர் சுப்புலட்சுமி (வயது 58) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கள் நகை பறிப்பு முயற்சி யில் ஈடுபட்டனர்.

சுதாரித்துக்கொண்ட அவர் நகையுடன் தப்பினார். இதுகுறித்து எம். ரெட்டியப் பட்டி போலீசில் சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள ஒரு சி.சி.டி.வி. காட்சிப்பதிவு களை கொண்டு நகை பறிப்பு சம்பவத்தில் ஈடு பட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு வாலிபர் களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள்தான் பெண் விடுதி காப்பாளர் சுப்பு லட்சுமியுடம் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ரெட்டையூரணி பகுதியை சேர்ந்த யுவஸ்ரீதர் (23), பரமக்குடி மணிநகர் பகுதி யைச் சேர்ந்த ஆதீஸ்வ ரன் (18) என்பதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News