உள்ளூர் செய்திகள்

தனியார் காப்பகத்தில் 2 மாணவிகள் மாயம்

Published On 2022-09-03 08:21 GMT   |   Update On 2022-09-03 08:21 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் தனியார் காப்பகத்தில் 2 மாணவிகள் மாயமானார்கள்.
  • ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகரில் உள்ள தனியார் தொண்டு குழந்தைகள் காப்பக நிர்வாகி எலிசபத் (வயது 40). இவர் பாண்டியன் நகர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கடந்த வாரம் காப்பகத்தில் கீழராஜகுலராமன், தாயில்பட்டியை சேர்ந்த 15 வயதுடைய 2 மாணவிகள் சேர்ந்தனர். சம்பவத்தன்று சாப்பிட செல்லும் போது இருவரும் காப்பகத்தில் இருந்து மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கார்த்தீஸ்வரி (21). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதே போல் திருத்தங்கலை சேர்ந்த தர்மராஜ் மகள் லட்சுமிபிரியா (22) என்பவரும் மாயமானார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி சங்கரலிங்கபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார். ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News