உள்ளூர் செய்திகள்

புயல் பாதித்து 2 வாரங்களாகியும் விழுப்புரம் புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்

Published On 2024-12-19 10:30 IST   |   Update On 2024-12-19 10:30:00 IST
  • புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
  • பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.

விழுப்புரம்:

புயல் கரையை கடந்து 2 வாரங்கள் ஆகியும் விழுப்புரம் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ந்தேதி புதுவை அருகே கரையை கடந்தது. அப்போது புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 செ.மீ. மழை பெய்தது. விழுப்புரம் நகரில் 63.5 செ.மீ. மழை பெய்தது.

இதன் காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.

குறிப்பாக விழுப்புரம் நகரத்திற்குட்பட்ட பெரும்பா லான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடு களை மழை நீர் சூழ்ந்தது.

அதில் விழுப்புரம் புறநகர் பகுதியான கிழக்கு பாண்டி சாலையில் உள்ள லிங்கம் நகர், ஆசிரியர் நகர், நேதாஜி நகர், கணபதி நகர் மற்றும் கீழ் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீருடன் கலந்த மழை நீர் சுமார் 4 அடி உயரத்துக்கு தற்போதும் தேங்கி உள்ளது.

இதனால் அப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அப் பகுதி பொதுமக்கள் சிலர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.

புயல் பாதித்து 2 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் புறநகர் பகுதியில் வெள்ளம் வடியாததால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வட்டா ரங்களில் விசாரித்தபோது, ஆசிரியர் நகர், லிங்கா நகர் இடையே உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள நீர் வழிப்பாதையில் தண்ணீ ரை வெளியேற்ற முடிவெடுத்த போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சுமார் 800 மீட்டர் நீளத்துக்கு 2 பைப் மூலம் தொடர்ந்த னூர் ஏரியில் நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.அப் பகுதி மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.

Tags:    

Similar News