உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே செல்போன் கடையை உடைத்து துணிகர கொள்ளை

Published On 2022-07-21 07:56 GMT   |   Update On 2022-07-21 07:56 GMT
விழுப்புரம் அருகே செல்போன் கடையை உடைத்து துணிகர கொள்ளை

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் அற்பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் திலகராஜ் (வயது 28). இவர் வளவனூரில் புதுவை-விழுப்புரம் சாலையில் செல்போன்கடை மற்றும் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை செல்ேபான் கடை திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் திலகராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சிய டைந்த அவர் கடைக்கு விரை ந்தார். அப்போது கடை யில் இருந்த விலை உய ர்ந்த செல்போன்கள், சிம்கா ர்டுகள், பழுதுபார்க்க வந்த செல்போன்கள் கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வளவனூர் போலீசில் திலகராஜ் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை பற்றி துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

Tags:    

Similar News