உள்ளூர் செய்திகள்

பரசுராமன்

திருநாவலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-10-01 08:22 GMT   |   Update On 2022-10-01 08:22 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளார்.
  • நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரசுராமனுக்கு 5-ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே தேவியானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 55) . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய் உளுந்தூ ர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிவு செய்து பரசுராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பரசுராமனின் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்ற த்தில் நிலுவையில் இருந்தது. தற்போது இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இதனை விசாரித்த நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரசுராமனுக்கு 5-ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதனை அடுத்து அபராத தொகை 10,000 கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 4 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News