உள்ளூர் செய்திகள்

புல், பூண்டுகள் மண்டிய நிலையில் காணப்படும் சாலை.

பழுதான சாலையை சீரமைக்க கிராமமக்கள் வலியுறுத்தல்

Published On 2022-12-14 10:16 GMT   |   Update On 2022-12-14 10:16 GMT
  • பல வருடங்களாக புதுப்பிக்கபடாததால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
  • சாலை ஒற்றையடி பாதை போன்று காணப்படுகிறது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 13 வது வார்டு அரையபுரம் கேட்டுத்தெரு, தோப்புத் தெருசாலை பல வருடங்களாக புதுப்பிக்கப்படாததால் சாலையை கிராமமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேலும் சாலை புல் பூண்டுகள் மண்டிய நிலையில் ஒற்றையடி பாதை போன்று காணப்படுகிறது.

சேதமடைந்த சாலையை புதுப்பிக்க கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராமமக்கள் வலியுறுத்தியும் நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது அரையபுரம்கேட்டுத்தெரு, தோப்புதெரு சாலை போடபட்டு 30 வருடத்திற்கு மேல் ஆகிறது.

தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்து இருசக்கர வாகனங்கள் கூட போக முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.

எனவே பழுதான சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News