உள்ளூர் செய்திகள்

தனிபட்டா கேட்டு கிராம மக்கள் கோரிக்கை மனு

Published On 2023-08-22 09:07 GMT   |   Update On 2023-08-22 09:07 GMT
  • பட்டா வழங்க கோரி கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஊர்பொது மக்கள் சார்பில் மனு அளித்தோம்.
  • எந்த அதிகாரியும் அதன் பின் எங்கள் கிராமத்திற்கு வந்து விசார ணை செய்யவில்லை

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா படப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலு வலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: -

நாங்கள் வம்சாவழியாக மேற்காணும் விலாசத்தில் வசித்து வருகிறோம். கடந்த 1988ம் ஆண்டு எங்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப் பட்டது.

அதனை மாற்றி தனி பட்டா வழங்க கோரி கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஊர்பொது மக்கள் சார்பில் மனு அளித்தோம். 2 வாரங்களில் அதற்குண்டான பதில் அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர்.

ஆனால் எந்த அதிகாரியும் அதன் பின் எங்கள் கிராமத்திற்கு வந்து விசார ணை செய்யவில்லை. வந்த வர்கள் ஊரில் எத்தனை குடும்பங்கள் உள்ளது என்ற விவரத்தை மட்டும் கேட்டு சென்றுள்ளனர்.

இதுநாள் வரை எங்களுக்கு எந்த பதிலும் கூறவில்லை. எனவே, சம்ம ந்தப்பட்ட அதிகாரி களை உடனடியாக அழைத்து, எங்களுக்கு தீர்வு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News