உள்ளூர் செய்திகள்

கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

Published On 2024-04-12 10:16 GMT   |   Update On 2024-04-12 10:16 GMT
  • கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகிறார்.
  • அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சீர்காழி: சீர்காழி அருகே கீழ மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரக்குடி கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் செய்து தர வில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை வசதி களை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து செல்கின்றனர்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றனர்.

இந்நிலையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது என போஸ்ட ர்கள் மற்றும் பேனர்கள் அடித்து கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளனர்.

இந்நிலையில் குமாரகுடி கிராமத்தில் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில் தங்களது கிராமத்திற்கு இது வரையில் எந்த ஒரு அடி ப்படை வசதிகளும் செய்து தராத அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனவும், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனில் வருகிற 14-ம் தேதி தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சி யரிடம் ஒப்படைக்க போவதாகவும் கிராம மக்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News