உள்ளூர் செய்திகள்
சுதந்திர தினத்தையொட்டி நீலகிரியில் 15-ந் தேதி கிராம சபை கூட்டம்- கலெக்டர் அம்ரித் தகவல்
கிராம பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 15-ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் கிராம பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.