உள்ளூர் செய்திகள்

சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி.

Published On 2023-12-11 14:09 IST   |   Update On 2023-12-11 14:09:00 IST
  • பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
  • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் திருமதி அனிதா ஆண்றோஸ், காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் திரு கால பெருமாள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News