கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை - கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு உறுதி
- கிருஷ்ணகிரி மாவட்டத் தில கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ்நி லையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.யால் "ஆப்ரேசன் கந்து வட்டி" கடந்த 7-ந் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த 10-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், போலீஸ் நிலையங்களிலும் கந்து வட்டி சம்பந்தமான மனு பெறும் முகாம்ந டந்தது.
இதன் காரணமாக மகராஜகடை போலீஸ் நிலைய எல்லையில் கந்து வட்டியால்பா திக்கப்பட்ட பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர், உரிய ஆவணங்களுடன் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில்பெ ரியபனமுட்லு கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மீது மகராஜகடை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், கோவிந்தசாமி வீட்டை சட்டப்படி சோதனை செய்து, இந்த வழக்கில்ச ம்பந்தப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் அதன் நகலை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்எ வரேனும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன்அ ருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலோ அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலோ புகார் அளித்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.