அய்யம்பாளையத்தில் கால்நடை சிகிச்சை முகாம்
- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் மணிவேல், தனவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ் , துரைசாமி, தடுப்பூசி பணியாளர்கள் பிரபு மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோ சனைகள் வழங்கினார்.
இதில், சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி விவசாயி களுக்கு, அ.குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் விருதுகள் வழங்கி னார். இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர்.