உள்ளூர் செய்திகள்

சென்னையில் மிக கடுமையான கடல் சீற்றம்

Published On 2024-11-30 11:49 IST   |   Update On 2024-11-30 11:49:00 IST
  • கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
  • கடற்கரை சாலையில் காலையில் மட்டும் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

சென்னை:

வங்கக்கடலில் 'ஃபெஞ்சல்' புயல் உருவானதையொட்டி, சென்னையில் இன்று கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டா் உயரத்துக்கு எழும்பி ஆா்ப்பரித்தன.

இதையொட்டி கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைச் சாலையில் காலையில் மட்டும் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது, கடல் அலைகள் பல மீட்டா் உயரத்துக்கு எழும்பி ஆா்ப்பரித்தன.

இதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா். மேலும், தடுப்புகள் அமைத்து கடலில் குளிக்கவோ, அலைகளில் கால் நனைக்கவோ யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

Tags:    

Similar News