உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் துணிகரம்: மின் ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2022-07-10 06:58 GMT   |   Update On 2022-07-10 06:58 GMT
  • விழுப்புரத்தில் துணிகர சம்பவம், மின் ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
  • மகளை பார்ப்பதற்காக கணேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார்.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் சென்னை-தேசிய நெடுஞ்சா–லையில் சலாமத் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் விழுப்புரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக உள்ளார். இவரது மகள் சென்னை–யில் உள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே மகளை பார்ப்ப–தற்காக கணேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகையை எடுத்து சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் கணேசனின் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அவர்கள் செல்போன் மூலம் கணே–சனுக்கு தெரி வித்தனர். அவர் இது குறித்து தாலுகா போலீசில் புகார் செய்தார்.


புகாரில் வீட்டின் பீரோ வில் 10 பவுன் நகை இருந்தது என தெரிவித்துள் ளார். அதன்பேரில் போலீசார் கணேசனின் வீட்டுக்கு சென்றனர். பீரோவில் இருந்த நகை மற்றும் பொருட்கள் மாயமாகி இருந்தது. கணேசன் வந்தால்தான் கொள்ளை போன பொருட்களின் முழு நிலவரம் தெரியவரும். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளயைர்களை பற்றி துப்புதுலக்க கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு விரைந்தனர். அவர்கள் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News