இளம்பெண், சிக்கன் வியாபாரி தூக்கிட்டு சாவு
- குடும்பத் தகராறால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி வஞ்சூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சுகன்யா (வயது 26) தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை இதன் காரணமாக குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த சுகன்யா நேற்று வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு விருதம்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விருதம்பட்டு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி இந்திராநகரை சேர்ந்தவர் சேரளி (42) சிக்கன் கடை நடத்தி வந்தார். இதில் போதுமான வருமானம் இல்லை. இதனால் அவர் மனம் உடைந்தார். நேற்று வீட்டில் இருந்த சேரளி அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்துவாச்சாரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.