உள்ளூர் செய்திகள்
பேரணாம்பட்டில் யோகா பயிற்சி முகாம்
- நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பிறந்த நாளை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணியின் சார்பிலும் நகர பா.ஜ.க. சார்பிலும் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஓ.பி.சி. அணியின் நகர தலைவர் ஜி.கந்தன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணியின் நகர பொதுச் செயலாளர் ஜி.முருகன், ஓ.பி.சி. அணியின் நகர பொருளாளர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.