உள்ளூர் செய்திகள்

பைக் மீது லாரி மோதி 2 பேர் சாவு

Published On 2022-09-19 09:44 GMT   |   Update On 2022-09-19 09:44 GMT
  • கல் உடைக்கும் தொழில் செய்து வந்தனர்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த கோரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). கட்டிட தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் சாமி ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜி (42) கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் பைக்கில் நேற்று மாலை கோரந்தாங்கள் பகுதியில் இருந்து திருவலம் நோக்கி காட்பாடி திருவலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது செம்பராயநல்லூர் அருகே வந்தபோது அரக்கோணத்தில் இருந்து திருவலம் வழியாக காட்பாடி நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மகேந்திரன், ராஜி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News