உள்ளூர் செய்திகள்

கம்பன் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடந்த காட்சி.

கம்பன் கழகம் சார்பில் முப்பெரும் விழா

Published On 2022-10-11 15:08 IST   |   Update On 2022-10-11 15:08:00 IST
  • விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தம் கம்பன் கழகத்தின் சார்பில் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் 9-ம் ஆண்டு கம்பன் விழா, நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா, விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியை முத்தமிழ் சுவை சுற்ற நிறுவனர் புலவர் பதுமனார் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கம்பன் கழக தலைவரும், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.ராமு என்.எஸ்.குமரகுரு, சி. கண்ணன், வீரய்யபத்தர், பாபுஜனார்த்தனம், பைரோஸ் அகமது, டி.என்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கம்பன் கழக நிறுவனரும், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி வரவேற்புரை நிகழ்த்தினார். கம்பன் கழக செயலாளரும் வழக்கறிஞருமான கே.எம். பூபதி மங்கல சிறப்புரையாற்றினார். சங்கத்தின் இணைச் செயலாளர் தமிழ் திருமால் தொடக்க உரையாற்றினார்.

விழாவில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கம்பன் கழக இணைச் செயலாளர் தமிழ் திருமாலிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தொடர்ந்து திருப்பத்தூர் கம்பன் கழக அமைப்பாளர் பொன்செல்வகுமார், கிருஷ்ணகிரி கம்பன் கழகத் தலைவர் ரவீந்தர் ஆகியோருக்கு கம்பர் மாமனி விருதும், மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமாருக்கு கவிமாமணி விருதும், அரசு சித்த மருத்துவர் தில்லைவாணனுக்கு சித்த மருத்துவமாணி விருதுகளை அம்பலால் வர்த்தக குழுமத்தின் தலைவர் கே.ஜவரிலால் ஜெயின், அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் கம்பன் செய்த பாயிரம் நெஞ்சில் நிற்கும் ஆயிரம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் வேலூர் ஆவின் தலைவர் த.வேலழகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி, நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, கூட்டுறவு வங்கி தலைவர் டி.சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கம்பன் கழக பொருளாளர் கே.இ.எம்.சிவக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. சம்பத்குமார் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News