உள்ளூர் செய்திகள்

வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் 308 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.

வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2023-04-15 14:52 IST   |   Update On 2023-04-15 14:52:00 IST
  • 308 பெண்கள் பங்கேற்றனர்
  • சிறப்பு தீபாராதனை நடந்தது

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர்.

மேலும் 308 பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

விழாவையொட்டி உற்சவர் எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கணபதி ஹோமம், வரலட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், ஆடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் பூஜை நிறைவடைந்ததும் சிறுமிகள் பங்கேற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை குமார் தேன்மொழி குடும்பத்தினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி செய்திருந்தனர்.

Tags:    

Similar News