உள்ளூர் செய்திகள்

பூ வியாபாரியிடம் நூதன முறையில் திருடிய பெண்கள்

Published On 2022-07-28 14:44 IST   |   Update On 2022-07-28 14:44:00 IST
  • ரூ.1.80 லட்சத்தை பறித்து சென்றனர்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி இவரது மனைவி ராஜகுமாரி பூ வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று மதியம் ராஜகுமாரி தனது மகளுடன் நகை உள்ளிட்ட பொருட்களை வாங்க பணத்துடன் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதிக்கு வந்துள்ளார் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி உறவினர்களை பார்க்க மகளுடன் லிங்குன்றம் கிராமத்திற்கு செல்ல பயணம் செய்துள்ளார்.

வழியில் 2 பெண்கள் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர் நெல்லூர்பேட்டையில் உள்ள மாசுபாடு அம்மன் கோவில் அருகே ஆட்டோ சென்றபோது ராஜகுமாரின் மகள் கோவிலுக்கு சென்று வருவதாக ஆட்டோவில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று உள்ளார் அப்போது ஆட்டோவில் இருந்த 2 பெண்கள் ராஜகுமாரியுடன் பேச்சு கொடுத்துள்ளனர்.

அப்போது கீழ சில்லறை காசுகள் உள்ளது என கூறியுள்ளனர்.அப்போது 2 பெண்களும் ராஜகுமாரியின் கவனத்தை திசை திருப்பி பையில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி உள்ளனர்.

சிறிது நேரத்தில் ஆட்டோவில் இறங்கி அந்த 2 பெண்களும் சென்று விட்டனர்.

மகளுடன் தொடர்ந்து ஆட்டோவில் பயணம் செய்த ராஜகுமாரி லிங்குன்றம் கிராமம் அருகே சென்றபோது பையை பார்த்தார் அதில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது பெண்கள் இருவரும் ராஜகுமாரியின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சத்து 80 ஆயிரம் திருடி சென்றது தெரிய வந்தது.

ராஜகுமாரி உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News