என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடிய பெண்கள்"

    • ஒரு பெண் தனது குழந்தைக்கு பால் கொடுக்க பஸ்சில் இடம் தருமாறு கேட்டார்.
    • பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடி மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார்.

    ராயக்கோட்டை,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அப்பு முதலியார் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது42).

    பெங்களூருவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    தனது மகள் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்க தனது முதலாளியிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு மனைவி மற்றும் மகளுடன் தனியார் பஸ்சில் நேற்று ஊருக்கு சென்றார்.

    சந்தனப்பள்ளி பஸ் நிறுத்தம் வந்த போது 2 பெண்கள் குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினர். அதில் ஒரு பெண் தனது குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். அதனால் இடம் தருமாறு சண்முகத்திடம் கேட்டார். அவர் எழுந்து இடம் கொடுத்தார்.

    ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே பஸ் வந்த போது சண்முகத்தின் மனைவியிடம் குழந்தையை கொடுத்து விட்டு பேச்சு கொடுப்பது போல் நடித்த அந்த பெண், சண்முகம் மனைவி வைத்திருந்த பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடி மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார்.

    இதை பார்த்த சண்முகம் பயணிகள் உதவியுடன் 2 பெண்களையும் பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், உடையார்பட்டி முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா மனைவி பாரதி (27), அயோத்திப்பட்டணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் மனைவி பிரியா (20) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ20 ஆயிரம் மீட்கப்பட்டது. 

    • ரூ.1.80 லட்சத்தை பறித்து சென்றனர்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி இவரது மனைவி ராஜகுமாரி பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று மதியம் ராஜகுமாரி தனது மகளுடன் நகை உள்ளிட்ட பொருட்களை வாங்க பணத்துடன் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதிக்கு வந்துள்ளார் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி உறவினர்களை பார்க்க மகளுடன் லிங்குன்றம் கிராமத்திற்கு செல்ல பயணம் செய்துள்ளார்.

    வழியில் 2 பெண்கள் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர் நெல்லூர்பேட்டையில் உள்ள மாசுபாடு அம்மன் கோவில் அருகே ஆட்டோ சென்றபோது ராஜகுமாரின் மகள் கோவிலுக்கு சென்று வருவதாக ஆட்டோவில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று உள்ளார் அப்போது ஆட்டோவில் இருந்த 2 பெண்கள் ராஜகுமாரியுடன் பேச்சு கொடுத்துள்ளனர்.

    அப்போது கீழ சில்லறை காசுகள் உள்ளது என கூறியுள்ளனர்.அப்போது 2 பெண்களும் ராஜகுமாரியின் கவனத்தை திசை திருப்பி பையில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி உள்ளனர்.

    சிறிது நேரத்தில் ஆட்டோவில் இறங்கி அந்த 2 பெண்களும் சென்று விட்டனர்.

    மகளுடன் தொடர்ந்து ஆட்டோவில் பயணம் செய்த ராஜகுமாரி லிங்குன்றம் கிராமம் அருகே சென்றபோது பையை பார்த்தார் அதில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது பெண்கள் இருவரும் ராஜகுமாரியின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சத்து 80 ஆயிரம் திருடி சென்றது தெரிய வந்தது.

    ராஜகுமாரி உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×