உள்ளூர் செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2023-09-02 09:31 GMT   |   Update On 2023-09-02 09:31 GMT
  • காளை மாடுகள் சன்டையிட்டதால் வாக்குவாதம்
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அம்பானி நகரை சேர்ந்தவர் இணையதுல்லா. இவர் காளை மாடு ஒன்னறை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் இணையதுல்லா தனது காளை மாட்டை ரங்கநாதர் நகரில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்தார்.

அப்போது இணைய துல்லா காளை மாடும், பக்கத்து நிலத்தில் கட்டி வைத்திருந்த கோபு (வயது 51) என்பவரின் காளை மாடும் ஒன்றுடன் ஒன்று சன்டை யிட்டது.

இது தொடர்பாக இணையதுல்லா, கோபு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கோபு, இணையதுல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இணையதுல்லா பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News