உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் சாவு

Published On 2023-08-22 08:06 GMT   |   Update On 2023-08-22 08:06 GMT
  • மனைவி போலீசில் புகார்
  • வழக்கு பதிவு செய்து விசாரணை

காட்பாடி:

காட்பாடி அருகே உள்ள உண்ணாமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 44), கூலித் தொழிலாளி.

இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலம் வழியாக நடந்து சென்றார்.

அப்போது, நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருத்தம் பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் தண்டபாணி உடலை மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவ மைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News