உள்ளூர் செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த காவலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்

Published On 2022-07-02 08:40 GMT   |   Update On 2022-07-02 08:40 GMT
  • பொம்மை படம் காட்டுவதாக கூறி கடத்திச் சென்றுள்ளார்
  • வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

வேலூர், ஜூலை.2-

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேருநகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் ராஜா (வயது 50). இவர் கால்நடைத்துறையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு விளையாடி க்கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பொம்மை படம் காண்பிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வக்கீல் சந்தியாசுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பளித்தார். அதில் சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்ததால் 20 ஆண்டுகளும், சிறுமியை வெளியே விடாமல் தடுத்து வைத்ததற்கு ஒரு ஆண்டும் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News