உள்ளூர் செய்திகள்

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-07-05 13:56 IST   |   Update On 2022-07-05 13:56:00 IST
  • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் புற்று கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் நவீன் (வயது 25).எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த நவீன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அவரது குடும்பத்தினர் அழுது துடித்தனர்.சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News