உள்ளூர் செய்திகள்

பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

Published On 2023-11-15 08:00 GMT   |   Update On 2023-11-15 08:00 GMT
  • மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

காட்பாடி அடுத்த சேனூர் வீர கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

நேற்று முன்தினம் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பைக்கில் தேவனாம்பட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். தேவனாம்பட்டு சாலையில் வந்தபோது பைக் நிலை தடுமாறி சுரேஷ் கீழே விழுந்தார்.

இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார் அவரை சமீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News