உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-11-21 15:15 IST   |   Update On 2022-11-21 15:15:00 IST
  • போலீஸ் விசாரணைக்கு பயந்து விபரீதம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அலமேலு மங்காபுரம் சமாதான நகரை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 21). இவர் உள்பட 4 பேர் மீது அந்தப் பகுதியில் அடிதடி சம்பந்தமாக புகார் வந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக அருள் செல்வம் மற்றும் அவரது நண்பர்களை சத்துவாச்சாரி போலீசார் அழைத்தனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் பயந்துபோன அருள் செல்வம் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.

ஆபத்தான நிலையில் அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள் செல்வம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News