உள்ளூர் செய்திகள்

வியாபாரியை கத்தி குத்து

Published On 2023-05-10 15:50 IST   |   Update On 2023-05-10 15:50:00 IST
  • ேபாலீசார் விசாரணை
  • ரவுடி கைது

வேலூர் :

வேலூர் கோட்டை பின்புறம் நவநீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவzணன். இவர் நேதாஜி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை மார்க்கெட்டில் பலாப்பழம் அறுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த வேலூர் எஸ்.எஸ்.கே. மானியம் பகுதியை சேர்ந்த ரவுடியான திருமலைக்கும், சரவணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை வெட்ட முயன்றார்.

இதனால் உயிருக்கு பயந்த சரவணன் திருமலையிடம் இருந்து தப்பி ஓடினார். இருப்பிணும் விடாமல் துரத்திச் சென்ற திருமலை பழைய மீன் மார்க்கெட் அருகே சரவணனை மடக்கிப் பிடித்து கத்தியால் கழுத்தில் குத்தினார்.

இதில் காயம் அடைந்த சரவணன் அங்கிருந்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு பயந்து ஓடினார்.

பின்னர் காயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலையை கைது செய்தனர். மேலும் திருமலையை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News