உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு அளிக்க வந்த காட்சி.

இலங்கை தமிழர்களுக்கு தரமற்ற வீடுகள் கட்டுப்படும் அவலம்

Published On 2022-10-14 10:37 GMT   |   Update On 2022-10-14 10:37 GMT
  • நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
  • தரமான வீடுகள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

வேலூர்:

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதி கபிலன், வேலூர் தொகுதி செயலாளர் சரத், தொகுதி துணை செயலாளர் முருகன் ஆகியோர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்ப தாவது:-

மேல்மொணவூரில் ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஈழ சொந்தங்களுக்காக இலவச தொகுப்பு வீடுகள் என்ற பெயரில் ரூபாய் 11 கோடி செலவில் 220 வீடுகள் கட்டும் திட்டத்தினை கடந்த ஆண்டு முதல்அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஆனால் வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பெற்ற கட்டுமான நிறுவனங்கள் வீடுகளை முற்றிலும் தரமற்ற முறையில் கட்டி வருவதாக முகாம்களில் வசிக்கும் மக்களே குற்றம் சாட்டினர். இதை அடுத்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கே நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அடித்தளம் ஆழமாக அமைக்கப்படாததும் சிமெண்டு அதிகளவு மலை மணல் கலக்கப்படுவதும் கான்கிரீட் தூண்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற கலவையில் வகையில் வீடுகள் கட்டப்படுகின்றனர். என்ற அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

நாடு இழந்து வீடு இழந்து மண்ணையும் மக்களையும் உயிரையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்து நிம்மதியாக உயிர் வாழ இந்த பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைத்திடாதா என்ற எதிர்பார்ப்புகளுடன் இன்னொரு தாய் நிலமான தமிழ்நாட்டுக்கு நம்மை நம்பி வந்த ஈழச் சொந்தங்கள் முகாம்கள் என்ற பெயரில் சிறையை விட கொடுமையான எவ்வித அடிப்படை வசதி அற்ற வதைக்கூடங்களில் ஒரு தலைமுறைக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த நாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத திபெத்தியர்களுக்கு வளமான வாழ்வை இந்திய பெரும் நாடு அமைத்துக் கொடுத்துள்ளது.

தமிழர்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத ஐரோப்பிய நாடுகள் கூட ஈழ தமிழ் சொந்தங்களை தங்கள் சொந்த நாட்டு குடிமக்களைப் போல அரவணைத்து ஆதரித்து வாழ வைக்கின்றனர். நம்முடைய தமிழ்நாட்டில் நம்முடைய தமிழக முதல்வர் இலங்கை தமிழர்களுக்கான கட்டுமான வேலையில் சற்றும் மனசாட்சியின்றி பாறையை உடைக்காமல் அதன் மீது போலி அஸ்திவாரம் போடுவது டம்மி கலம் போட்டு கட்டுவது தரமற்ற கம்பிகளை கொண்டு கட்டுமான பணிகளை செய்வதும், தூண்களே எழுப்பாமல் சுவர் எழுப்புவதும் ஈழத் தமிழ் மக்களின் உயிர்களில் விளையாடும் ஒரு செயலாகும் இத்தகைய செயல், மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு மேல்மொணவூரில் ஈழ சொந்தங்களுக்கு புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் தர மற்றதாக கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி உறுதிமிக்க தரமான வீடுகள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News