உள்ளூர் செய்திகள்
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 20). ராணுவ வீரர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று இரவு கோரந்தாங்கல் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் பாஸ்கரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சிறிது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.