உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்

Published On 2023-06-04 13:57 IST   |   Update On 2023-06-04 13:57:00 IST
  • விசாரணைக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்
  • இடைக் கால நடவடிக்கையாக வேறு பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது

வேலூர்:

வேலூர் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் 7 பெண் ஆசிரியைகள் பணியாற்றும் நிலையில், தலைமை ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியைகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இத னால், பள்ளியில் மாணவர்களின் கற்றல் பணி பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு இருந்தது.

இந்த பள்ளியில் பணியாற்றும் 7 ஆசிரியை களும் ஒன்றிணைந்து, கடந்த மார்ச் மாதம் மாவட்ட தொடக் கக் கல்வி அதிகாரி தயாளனிடம். தலைமைஆசிரியர் மீது பாலியல் புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-தலைமை ஆசிரியர் கண்காணிப்பு என்ற பெயரில் ஆசிரியைகளிடம் அத்துமீறி செயல்படுவது, விதி களுக்கு முரணாக தன்னிச்சை யாக செயல்படுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆசிரியைகள் தரப்பில் அளித்த பாலியல் புகார் மனு மீது, உள்ளூர்புகார்குழுவினர் விசாரணைக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இதையடுத்து, தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து, உள்ளூர் புகார் குழுவினர் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கடந்த மாதம் சமர்பித்தனர்.

தொடர்ந்து, பாலியல் புகாருக்கு உள்ளான தலைமைஆசிரியர் மீது இடைக் கால நடவடிக்கையாக வேறு பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி தயாளனிடம் கேட்டபோது,

"மேற்குறிப்பிட்ட பள்ளி யின் தலைமைஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்த உள்ளூர் புகார் குழுவின் விசாரணை அடிப்படையிலும், சம்பந்தப் பட்ட பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணிகள் எந்தவித இடையூறும் இன்றி செயல்படு வதை உறுதிசெய்யும் வகை யிலும், புகாருக்கு உள்ளான தலைமை ஆசிரியருக்கு, குருமலை பஞ். யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கி உத்தர விடப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் புகார் குறித்த விசாரணை முடிவின் அடிப்படையில், சம்பந்தப் பட்ட தலைமைஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News